கால்பந்து - சில நினைவு குறிப்புகள்

இதோ இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது.  இந்த உலகமே கண்டு களிக்கப் போகும் கால்பந்து திருவிழா ஆரம்பிக்க. 8 குருப்புகளாக 32 அணிகள் மோதும் 64 போட்டிகள் கணகளுக்கு விருந்தாகபோகின்றன. சிறு வயதில் இருந்தே என் மனதை மிக கவர்ந்த விளையாட்டாக இருப்பது கால்பந்தாட்டம் தான். இதற்கு நான் பிறந்து வளர்ந்த ஊரும் படித்த பள்ளியும் காரணம். 

எங்கள் ஊர் சாத்தூரில் வருடம் தோறும் நடை பெறும் அரசன் கணேசன் சுழற் கோப்பை எங்கள் ஊரை பொருத்த மட்டில் உலககோப்பை கால்பந்து போட்டி மாதிரிதான் எங்கள் ஊர் மக்களுக்கு. எங்கள் பள்ளி மைதானத்திலே நடந்தாலும் பள்ளி நடைபெறும் நாட்களில் மைதானத்தை சுற்றி தட்டிப்போட்டு தடுப்பமைத்து பள்ளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டிருக்கும். இந்த போட்டிகளில் ஆட தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் அணிகள் கலர் கலராக சட்டை அணிந்து கொண்டு கால்களில் பூட்களுடன் அவர்கள் விளையாடுகையில் அவர்கள் கால்களின் ஊடே உருண்டு செல்லும் அந்த பந்தின் மீதே அணைவரின் கவனமும் இருக்கும்.

தான் சப்போட் செய்யும் அணியினர் கோல் போட தவரும் போது காற்றில் தவழ்ந்து வரும் வார்த்தைகளில் ஒரு வித ஏமாற்றம் கலந்திருக்கும். கிரவுண்டை சுற்றி நிற்கும் சில மக்கள் தான் சப்போட் செய்யும் அணியினர் பந்தை கடத்தி வரும்போது  “ ஏய் இந்த பக்கம் பாரு. லெப்ட்ல ஆளே இல்ல . ப்ந்த இவன் கிட்ட பாஸ் பன்னு” போனற கமெண்டுகள் சகஜம். போட்டி முடிந்து கிளம்புகையில் மொத்த கூட்டமும்  “ அவன் ஏன் இப்படி ஆடறான். அந்த கார்னர் கிக் அப்ப இவன் அழகா அடிச்சான். கொஞ்சம் தலைய கரக்டா வெச்சு பட் அடிச்சுருந்தா கரக்டா உள்ள போய்ருக்கும்” போன்ற விவாதங்கள் சகஜம். எங்கள் ஊரே மிகவும் ரசித்த விளையாட்டு இது.  முக்கியமாக ஊரில் நடக்கும் பொருட்காட்சிக்கு வரும் கூட்டத்தை விட புட்பால் மேட்சுகளுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

எங்கள் ஊரை சேர்ந்த ஒய்.எம்.சி.எ அணியினர் தினமும் சாய்ங்காலத்தில் எங்கள் ஸுகூல் கிரவுண்டில் பிராக்டிஸ் செய்வார்கள். அந்த காலத்தில் அவர்கள் எல்லாம் எங்களுக்கு ஹூரோக்கள்தான். செண்டர் பார்வர்டு ஆடும் சந்தானம் அண்ணண் எங்கள் எல்லோருக்கும் மரடோனாவாகத்தான் தெரிவார்.  கோல்கீப்பர் பொன்முருகன் இன்னொரு ஹீரோ. ஆள் ஒல்லியாக இருப்பார். கையில் கிளவுஸுடன் அவர் கோல் கீப்பராக நிற்பதே அழகு. அப்புறம் இன்னொருவர் லோடுமேன் கதிரேசன் அவர் பெயர். எனது பேவரைட் அவர்தான். ஒருமுறை அவர் அடித்த பந்து கோல்போஸ்டை தாண்டி பின்நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என் தலையில் அடிக்க தலை என் உடம்பில் இருந்து தணியே பிய்துக்கொண்டு போகிறமாதிரி இருந்தது. அவர் உதைத்த உதை அந்த மாதிரி.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்கு உயர் நிலை பள்ளியில் சேர்ந்ததில் இருந்து பல பீ.டி. பிரியட்களில் கால் கட்டை விரல் தேய பள்ளி மைதானத்தில் ஒடியிருக்கிறேன் பந்தை துரத்திக்கொண்டு. ஆனால் எத்தனை கோல் போட்டிருப்பேன் என்றல்லாம் இடக்கு மடக்காக கேள்வியெல்லாம் கேக்க கூடாது.  ஆறாம் வகுப்பில் சேர்ந்ததில் இருந்து எங்கள் கிளாஸில் இருந்த எல்லாரும் இரண்டு அணிகளாக பிரிந்து பீ.டி பிரியட்களில் ஒரே மோதல்தான்.எங்கள் கிளாஸில் இருந்த குமரன் மற்றும் கிங்ஸ்லி இருவரும் தான் அணி கேபடன்கள். நான் குமரன் அணி.சட்ட திட்டங்கள் சரியாக தெரியாத அந்த வயதில் எல்லாரும் பந்தை துரத்தி கொண்டு ஒடிய அந்த பொழுதுகள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

அடுத்து வரும் நம் சந்ததியினருக்கு அப்படியெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.  நல்ல விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் அரிதாகி வருகின்றன. பள்ளிகளும் படிப்பதற்கு தரும் முக்கியத்துவத்தை விளயாட்டுகளுக்கு தருவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளை படி படி என்று விரட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் ஒய்வு நேரத்தில் கூட தொலைக்காட்சிகளில் வரும் விளையாட்டு நிகழ்ச்சிகளை கூட பார்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களயும் சீரியல்கள் ஆக்ரமித்துகொண்டிருக்கின்றன. 

“ ஒடி விளையாடு பாப்பா. நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் பாட்டு ஏனோ நியாபகத்தில் வந்து போகிறது. உடல் உழைப்பை அறியாத ஆராக்கியமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் முயன்று கொண்டிருக்கிறோமோ என்ற கவலை மனதை அரிக்கிறது.  படிப்பு எவ்வளவ்வு முக்கியமோ அந்த அளவுக்கு விளையாட்டும் முக்கியம்தான். இதை பள்ளிகளும் பெற்றோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  சுவர் இருந்தால்தான் சித்திரம். அதைப்போல் நல்ல உடல்நலமிருந்தால்தான் எவவளவ்வு படித்தாலும் நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

4 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நல்ல பதிவு...எதிர்பார்ப்பும் கூட

    பதிலளிநீக்கு
  2. தம்பி கால்பந்துன்ன உடனேதான் எனக்கு ஞாபகம் வருது. நாம ஏழாவது படிக்கும்போது உங்க ஸ்கூல் எங்க SBK, அருப்புக்கோட்டைக்கு வந்து கால்பந்து போட்டில தகராறுபண்ணி அடிவாங்கிட்டு ஒடுனாங்களே

    பதிலளிநீக்கு
  3. அடுத்து வரும் நம் சந்ததியினருக்கு அப்படியெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. நல்ல விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் அரிதாகி வருகின்றன. பள்ளிகளும் படிப்பதற்கு தரும் முக்கியத்துவத்தை விளயாட்டுகளுக்கு தருவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளை படி படி என்று விரட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் ஒய்வு நேரத்தில் கூட தொலைக்காட்சிகளில் வரும் விளையாட்டு நிகழ்ச்சிகளை கூட பார்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களயும் சீரியல்கள் ஆக்ரமித்துகொண்டிருக்கின்றன.


    ...........உண்மையை சொல்றீங்க..... கிரிக்கெட் விளையாட்டும் இல்லைனா? அவ்வ்வ்வ்...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் ஆர்வமாய் காத்திருக்கிறேன் போட்டிகளைப் பார்க்க! :)

    --

    // நல்ல விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் அரிதாகி வருகின்றன//

    உண்மைதான்! படி! சம்பாதி. அவ்வளவுதான் வாழ்க்கை! என்பதாய் ஆகிவிட்டது:(

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்