தேடல் உள்ள வாழ்வினிலே தினமும் ருசி இருக்கும்


 நம் வாழ்க்கையில் பல தரப்பட்ட மனிதர்களுடன் கைகுலுக்கும் தருணங்களை நமக்கு ஏற்படுத்தி தருவது புத்தக்ங்களும், பயணங்களும் தான். அந்த தருணங்களில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம்மை அறியாமல் நமக்குள்ளும் ஏதேனும் விசயங்களை பதிய வைத்து விட்டு சென்று விடுவர்.  அத்தகைய பயணங்கள் எல்லோருக்கும் வாய்பது இல்லை.  நம்மிடத்தில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. 

அதை போன்ற ஒரு பயணத்தை உணர கூடிய அனுபவத்தை தருகிறது மிஷ்கின்னின் இந்த மொழிபெயர்ப்பு கவிதை.  எல்லோருக்கும் உண்டான அரிசி மணிகள் இந்த படம் முழுதும் சிதறிக்கிடக்கின்றது. உங்களுக்கு உண்டான அரிசி மணியை நான் எடுத்துக்கொடுக்க கூடாது. அதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.  

ஐந்து வயதில் அம்மா என்னை “சனியனே” என்றும் கொஞ்சிய பொழுது ஏண்டி கொழந்தய எப்ப பார்த்தாலும் திட்டிண்டே இருக்க் என்று அனைத்த அண்ணத்து மாமியிடமும், பத்து வயதில் ஊரில் உள்ள அத்தனை வம்புகளயும் இழுத்து கொண்டு வந்த போது அடித்த அம்மாவிடம் இருந்து என்னை இழுத்து கொண்டு ஏண்டி எப்ப பார்த்தாலும் பிள்ளய திட்டிக்கிட்டே இருக்க, அவன் சூப்பரா வருவான் பாரு என்று அன்பு கரம் நீட்டிய மைதிலி மாமியடமும்,  வீட்டில் பிடித்த சாப்பாட்டை சமைக்காததால் கோபித்து கொண்டு சாப்பிடமால் பள்ளிக்கு வரும் வழியில் அன்புடன் அழைத்து அன்னமிட்ட வள்ளியம்மை டிச்சரிடமும் ஒடுகிறது எனது மனம் இந்த் படத்தை பார்க்கயில். அந்த சிறுவன் அந்த பெண்ணிற்கு அவன் அத்தனை நாள் தேக்கி வைத்த முத்தத்தை கொடுக்கயில் ஏனோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என் அம்மாவின் நெத்தியில் ஒரு முத்தமாவாது கொடுத்து விட துடிக்கிறது என் மனசு..

அம்மா.. I  Miss You....




 அன்புடன் ,
இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

22 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அந்த சிறுவன் அந்த பெண்ணிற்கு அவன் அத்தனை நாள் தேக்கி வைத்த முத்தத்தை கொடுக்கயில் ஏனோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என் அம்மாவின் நெத்தியில் ஒரு முத்தமாவாது கொடுத்து விட துடிக்கிறது என் மனசு..


    ....very touching.

    பதிலளிநீக்கு
  2. உள்ளூர்ல உள்ள நானே பாக்களை. நீ எதுக்கு அதுக்குள்ளே பாத்தா பாவி..

    பதிலளிநீக்கு
  3. //இரா பக்கங்கள்//

    பக்கங்கள் அப்டின்னு போட்டுட்டு ரொம்ப தூரத்துல நாடு விட்டு நாடு இருக்கியே ஏன்? # டவுட்டு...

    பதிலளிநீக்கு
  4. இருடி வரேன். ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருக்க. வரேன்..

    பதிலளிநீக்கு
  5. //தேடல் உள்ள வாழ்வினிலே தினமும் ருசி இருக்கும்//

    நான் நேத்து எதையும் தேடலையே. ஆனாலும் நேத்து நான் சாப்பிட்ட சப்பாத்தி நல்லா ருசியாத்தான் இருந்தது. எப்படி?

    பதிலளிநீக்கு
  6. \\அந்த சிறுவன் அந்த பெண்ணிற்கு அவன் அத்தனை நாள் தேக்கி வைத்த முத்தத்தை கொடுக்கயில் ஏனோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என் அம்மாவின் நெத்தியில் ஒரு முத்தமாவாது கொடுத்து விட துடிக்கிறது என் மனசு..\\
    இதுதான் இயக்குநரின் வெற்றி. சுருக்கமான, அழகான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  7. பார்த்தாச்சா:)). விமரிசனம் எல்லாம் சூப்பரா வருது. இதுவும் நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  8. //எல்லோருக்கும் உண்டான அரிசி மணிகள் இந்த படம் முழுதும் சிதறிக்கிடக்கின்றது. உங்களுக்கு உண்டான அரிசி மணியை நான் எடுத்துக்கொடுக்க கூடாது. அதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்.//

    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். சரி:)!

    நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  9. [[[பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற என் அம்மாவின் நெத்தியில் ஒரு முத்தமாவாது கொடுத்து விட துடிக்கிறது என் மனசு.]]]

    திரைப்படம் பார்த்த அத்தனை பேரின் மனநிலையும் இதுதான்..! இதுவரையிலான அத்தனை விமர்சனத்திலும் இல்லாத ஒன்றும் இதுதான்..! நன்று தம்பி..!

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் தல....பின்னிட்டீங்க...
    இந்த மாதிரி மனித உணர்வுகளையும், மனித உறவுகளையும் பற்றியும் எடுக்கப்படும் படங்கள் நிச்சமயாக வெற்றிப்பெற வேண்டும். நான் மலையாள படங்கள் அதிகம் பார்ப்பதன் காரணமே அதுதான்... படத்தை பார்க்கும் ஆவலில் இருக்றேன்...

    பதிலளிநீக்கு
  11. உணர்வின் வெளிப்பாடு அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  12. கிகுஜீரோ காப்பி என்கிறார்கள். இருந்தாலும் தமிழில் இது புதிது தான்.

    பதிலளிநீக்கு
  13. இந்த படமே ஒரு உணர்வுக் குவியல்.... நீங்கள் அதை விமர்சித்த விதம் அருமை!!!

    பதிலளிநீக்கு
  14. கை கொடுங்க ராம், உங்கள் எழுத்து நடை மிளிர்கிறது! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அண்ணா செம டச்சிங் விமர்சனம்.. நான் இன்னும் பார்க்கல.. சீக்கிரம் பார்த்துடுறேன்

    பதிலளிநீக்கு
  16. 'நாளை மற்றுமொரு நாளே' என நிறுத்துப் பார்க்க நேரமில்லாதொரு வாழ்க்கை. 'ஒருநாளைப்போல் இன்னொரு நாள் இருப்பதில்லை' எனத் தொடர்மாறுதலை உணர்ந்ததொரு வாழ்வு. இரண்டாவது உங்களுடையது. உங்கள் வலைத்தளத் தோற்றத் தொடர்மாறுதலைக் கொண்டு இதை நிறுத்தேன்.

    நேற்றே பின்னூட்டம் இட, வழி தெரியவில்லை. இன்று திறந்திருக்கிறீர்கள்.

    அண்ணத்து மாமியிடமும், மைதிலி மாமியிடமும், வள்ளியம்மைச் டீச்சரிடமும் தாய்மையை உணர்ந்து ஓடுகிற மனம்...

    சுருங்கச் சொல்லி விளங்க உணர்த்தியிருக்கிறீர்கள். வாழ்க!

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப அருமையா விமர்சனம் செஞ்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  18. @@ நன்றி சித்ரா
    @@ நன்றி ரமேஷ்
    @@ நன்றி அம்பிகா
    @@ நன்றி பாலாசார்
    @@ நன்றி ராமலக்ஷ்மி
    @@ நன்றி மரா
    @@ நன்றி உ.த.அண்ணாச்சி
    @@ நன்றி இலக்கியவாதி பிரதாப்
    @@ நன்றி மாதேவி
    @@ நன்றி நந்தா
    @@ நன்றி அனுஷ்கா
    @@ நன்றி சிவராம்குமார்
    @@ நன்றி ‘யூத்’ அண்ணா
    @@ நன்றி பிரபாகரன்
    @@ நன்றி சை.கொ.ப
    @@ நன்றி பாலாஜி
    @@ நன்றி ராஜாசுந்தர்ராஜன் சார் உங்க தொடர் கருத்துகளுக்கும் ஊக்கத்துகும்.. இன்னும் கொஞ்ச் நாளுக்கு இது மாறாதுங்க சார்
    @@ நன்றி எஸ்.கே

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்