Bharamaram(2009)

நீங்கள் சிறு வயதில் செய்த ஒரு தவறை அதனால் வரும் பின்விளைவுகளை யோசிக்காமல் வேறு ஒருவர் மேல் சுமத்தினால் , அதனால் அந்த நபரின் வாழ்வு என்ன ஆகும் ? இது என்ன கேள்வி என்று கேட்க தோணுகிறதா ? ஒரு வேளை குற்றம் சுமத்தபட்ட நபரின் வாழ்வு அதனால் சிதைந்து போயிருந்தால். என்ன இது முட்டாள் தனமான சிந்தனை என்று கேட்கதோணுகிறதா ? எனக்கும் அதே உணர்வுதான் இந்த படத்தை பார்க்க தோன்றும் போது இருந்தது.

உன்னி கோயம்புத்தூரில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஒரு மத்திய வர்க்க குடும்ப தலைவன். அவனை தேடி வரும் ஒரு நண்பணின் பார்வையில் ஆரம்பிக்கிறது படம். அந்த நண்பணை அடையாளம் தெரியாமல் முதலில் ஒட்ட மறுக்கும் உன்னி, பிற்பாடு அந்த நண்பணின் சிய செயல்களால் அவனை நம்பி பழக ஆரம்பிக்கிறான். நடுவினில் வேறொரு நண்பனிடத்தில் பேசும் போது, அவன் இந்த நண்பணை பற்றி சொல்லும் போது, அதற்கு அவன் , உன்னி சொல்லும் பெயரில் அவர்களுடன் படிக்கவில்லை எனவும் , வேறு ஒருவனின் பெயரை சொல்லி இவன் அவனாக இருக்க கூடும் என எச்சரிக்கை செய்கிறான். அது முதல் உன்னி இவனை சந்தேக பார்வையில் பார்க்க ஆரம்பிக்கிறான். அடுத்த நிகழும் சில சம்பவங்களினால் அந்த நண்பண் யார் என தெரிய வருகிற்து. அந்த நண்பணின் கட்டாய படுத்துவதால் , வேறு வழியில்லாமல் அவனுடன் அவன் குடும்பததை சந்திக்க உன்னி பயனப்படுகிறான். அந்த பயனத்தில் நண்பணால் உன்னிக்கு கிடைக்கும் அனுபவங்களும், முடிவினில் ஏற்படும் ஒரு அதிர்சியுமே கதை.

உன்னியாக சுரேஷ் மேனன் என்ற நடிகரும், அவரை தேடி வரும் நண்பணாக சிவன் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடித்திருக்கிறார்கள். இது முழுக்கமுழுக்க லாலேட்டனின் படம். பின்னி பெடலெடுத்திருக்கிறார். பூமிகா லாலேட்டனின் மனைவியாக மிகச்சில காட்சிகளே வந்தாலும் அவரது பண்பட்ட நடிப்பாலும், அவரது கதாபாத்திரத்தின் அதிர்சிகரமான முடிவாலும் மனதில் கனமாக உட்கார்ந்து கொள்கிறார். பிளஸ்ஸியின் இயக்கமும் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த படம் பல நெகடிவ் விமர்சன்ங்களை பெற்றிருந்தாளும் கூட லாலேட்டனின் மிக சிறப்பான நடிப்பால் கட்டாயம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். இந்த படம் எனக்கு உணர்த்திய நீதி ஒன்றுதான். அது “உங்களது சிறு புன்னகை கூட மற்றவர்களை ஒரு துளி கூட சங்கடப்படுத்த கூடாது” என்பதுதான்.

டிஸ்கி

இந்த பதிவ படிக்கிற எல்லாரும் மறக்காம தமிழிஷ், தமிழ்மணம்ல் ஒங்க ஒட்ட கொஞ்சம் குத்திருங்க. அப்படியே எதுநாச்சும் திட்டணும்னு தோணிச்சின்னா இங்க எழுதி விடுங்க

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

3 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அந்த படத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் விமர்சனமும் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி.
    தமிழிஷ் இணைப்பு பதிவில் இல்லையே? ஏன்?

    பதிலளிநீக்கு
  2. @ சித்ரா.
    தவறு சரி செய்யப்பட்டுவிட்டது சித்ரா. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    @ நன்றி சைவகொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்