குற்றம்

காட்சி 1
இருக்கன்குடியில் இருந்து புரப்பட்ட அந்த கவன்மெண்ட் பஸ் நெம்மேனி பஸ் நிறுத்ததில் நின்று புறப்பட்ட ஆய்த்தமாக டிரைவர் கியரை மாற்றிய பொழுது பஸ் நிருத்தத்திற்கு ஒட முடியாமல் ஒடி வந்து கொண்டிருந்த பொன்னாத்தா கிழவி ” எய்யா செத்த நிறுத்துய்யா வண்டிய. நானும் ஏறிக்கிடுதேன்” என்று கத்திக்கொண்டே பஸ்ஸை தட்டினாள். கிழவியின் சத்தத்தை கேட்ட கண்டக்டர் விசில் ஊதி  வண்டியை நிறுத்தினார். கிழவியை ஏறிய உடன் அந்த ரோட்டில் முனங்கிகொண்டே சாத்தூரை நோக்கி பயணத்தை துவங்கியது பஸ்.
”ஏத்தா எங்க போவனும்” கண்டக்டர்.
“சாத்தூருக்குத்தான். எம்முட்டுய்யா “ என்ற கிழவியடம்
“டெய்லி பஸ்ல ஏறினாலும் இதே கேள்விதானா உனக்கு. 3.50 சில்லறை வெச்சுருக்கியா. இல்லேன்னா அப்படியே இறக்கி விட்றுவேன்” என்றார் கண்டக்டர்.
“ இருக்கு. இந்தா “ என்று இடுப்பில் மாட்டியிருந்த சுருக்குப் பையில் கிடந்த சில்லறைய பொருக்கி தந்து கண்டக்டர் கொடுத்த டிக்கெட்டை வாங்கி சுருக்கு பையில் திணித்தாள்.
“எல்லாரும் டிக்கெட்ட பத்திரமா வச்சுக்கங்க. வாங்கதவைங்க வாங்கிருங்க. ரெயில்வே கேட் பக்கத்துல செக்கிங் நிப்பாங்க. அவிங்க எதுவும் சொன்னா அப்புறம் கத்தாதிங்க” என்று குரல் கொடுத்துக்கொண்டே கண்டக்டர் நகர்ந்தார்.
பஸ்ஸில் உக்கார இடமில்லாமல் கூட்டம் நெருக்கி அடித்தது. பிடிமானதுக்கு பக்கத்தில் உள்ள சீட்டின் கம்பியை பிடித்து கொண்ட கிழவி “ ஏத்தா நீ சுடலையம்மா பேத்திதான. கல்யாணம் ஆயி சிவில்லிபுத்தூர்ல இருக்கறதா சொன்னாங்க. என்ன இந்த பக்கம். வீட்டுல அப்பன் ஆத்தால்லாம் எப்படி இருக்காங்க “ என்றாள்.
“ எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்க்கீங்க. மாரிமுத்து அண்ணனுக்கு ஏதோ வண்டி மோதி ஆசுபத்திரில இருக்காங்கன்னு சொன்னாங்க. இப்ப எப்படி இருக்காங்க. கணேசன்ன எப்படி இருக்கு. அண்ணி எப்படி இருக்காங்க” என்றாள் சீட்டில் உட்கார்ந்து இருந்தவள்.மாரிமுத்து கிழவியின் மூத்த மகன். கணேசன் இரண்டாம் மகன். சாத்தூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த்தான். மாரிமுத்துவுக்கு மட்டும் கல்யாணம் ஆயிருந்தது.
“ நல்லா கேட்ட போ. அது நடந்து ஆச்சு ஒரு வருசம்.  இப்பத்தான் கேக்கனுன்னு தோணிச்சா ஒனக்கு. இப்பா நல்லா இருக்கான் “ என்று சொல்லவும்
“ முக்குராந்தகல் வந்த்ருச்சு. இறங்கவறங்க இறங்கிங்க “ என்ற கண்டக்டரின் குரல் கேட்டு “ ஏத்தா நான் இறங்கனும் . ஆத்தா அப்பனுல்லாம் கேட்டேன்னு சொல்லு” என்றவாறே பஸ்ஸில்ருந்து இறங்கினாள் கிழவி.
” ஏத்தா ஒனக்கு விசயமே தெரியாதா. ஒரு மாசத்துக்கு முன்னாடி மாரிமுத்து பய வட்டிக்கு காசு கொடுத்தவன் திரும்பி கேட்டான்னு அவன அடிச்சு கொன்னு போட்டான்னு அவன் போலிஸ் புடிச்சுட்டு போயிருச்சுல்ல. கிழவி பாவம்தா. வக்கில் ஆபிஸுக்கும் , கோர்ட்டுக்கும் நடையா நடந்துட்டுருக்கு. நல்லது நடந்தா சரிதான் “ என்றாள் பஸ்ஸில் சிவில்லிபுத்தூர் காரிக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவள்.
பஸ்டாண்டை நோக்கி பஸ் புறப்பட வக்கில் ஆபிஸ் இருந்த  பெருமாள் கோவில் தெருவை நோக்கி காலை தேய்த்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் பொன்னாத்தா கிழவி.
காட்சி 2
தொரந்திருந்த வக்கில் ஆபிஸுக்குள் எட்டிப் பார்த்தால் பொன்னாத்தா கிழவி. எட்டிப்பார்த்த கிழவியை “வாங்க உள்ள “ என்றார் வக்கில் குமாஸ்தா சுப்பு. 
உள்ளே வந்த கிழவி “ வக்கில் அய்யா இருக்காங்களா” என்றாள்.

“அப்படி ஒரமா உக்காருங்க. சார் உள்ள போன் பேசிகிட்டு இருக்காங்க. பேசி முடிச்ச உடனே நான் போய் சொல்லிட்டு கூப்புடறேன்” சுப்பு.
“அய்யா என்ன சொல்றாங்க. மவன காப்பாத்திருவாங்கள். அவன் ஒரு தப்பும் செய்ஞ்சுருக்க மாட்டான்யா” கிழவி.
“ எல்லாம் சார் சொல்லுவார். பொருங்க ” என்று சொல்லிக் கொண்டே வக்கில் அறையை பார்த்து நகர்ந்தார் சுப்பு.
போனவர் சற்று நேரம் கழித்து வெளியே வந்து   “ போங்கம்மா உங்கள சார் கூப்பிடறாங்க ” என்று கிழவியை உள்ளே அனுப்பினார்.

உள்ளே சேரில் உட்கார்ந்திருந்த வக்கில் ஸ்ரீதரன் கிழவிய பார்த்து “ வாங்கம்மா” என்றார்.  “ உங்க மகன் கேஸைதான் பாத்துகிட்டு இருக்கேன். நாலன்னைக்கு போலிஸ்லேந்து உங்க மவன கோர்ட்டுல ஆஜர் பண்றாங்க. நான் நாளக்கு போய் அவன ஜெயில்ல போய பாத்து பேச போறேன். காட்சில்லாம் அவருக்கு எதிரா இருக்கு. என்னால என்ன பன்ன முடியும்னு பாக்கறேன். நீங்களும் ஏன் கூட வாங்க. அவற வாய தொறந்து நான் சொல்ல சொல்றத சொல்ல சொல்லுங்க. அவர் நான் சொல்றத கேட்டாதான் எதுவும் செய்ய முடியும் ” என்றார்.

“ அய்யா காப்பதிருங்கய்யா. அவுந்தான் என் குடும்பத்துக்கு முக்கியம் ” என்ற கிழவியை பார்த்து “ என்னால முடிஞ்சத நான் பண்ணறேன். நீங்க ஒங்க சின்ன பையனையும் கூட்டிகிட்டு நாளைக்கு ஜெயில்லுக்கு வந்துருங்க ” என்று சொல்லிக்கொண்டே சேரை விட்டு எழுந்தார்.

அறையை விட்டு வெளியே வந்தவள் குமாஸ்தா சுப்புவிடம் சொல்லிக்கொண்டு வக்கில் ஆபிஸை விட்டு வெளியே வந்தாள். வானம் கருத்திருந்தது.

காட்சி 3

மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகளுக்கான செல்லில் அடைக்கப்பட்டிருந்த மாரிமுத்து விட்டத்தை வெரித்துப்பார்த்து உட்கார்ந்த்ருந்தான். அவன் கண்களில் கிழே படிந்திருந்த கண்ணிரின் படிமம் அவனின் மன நிலைய சொல்லியது.

கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் அவனில் மனதில் ஒடிக்கொண்டிருந்தது. தனக்கு நடந்த துரோகமும், வட்டிக்கு காசு கொடுத்தவன் பேசிய பேச்சும், தம்பி , மனைவி மற்றும் ஆத்தாளை பற்றிய நினைப்பும் அவனை ஒரு மாதமாக தூக்கம் கொள்ளாமல் செய்திருந்ந்தது.

சிந்தனை வயப்பட்டு கிடந்தவனின் சிந்தனைய கலைத்தது “ ஏய் உன்னைய பாக்க ஒன் ஆத்தாளும், தம்பியும் வக்கிலோட வந்துருக்காங்க. எந்திச்சு வா” என்ற வார்டனின் குரல்.

-- தொடரும்.



க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

8 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. கதை நல்லா பிக் அப் ஆகி போய்கிட்டு இருக்குதுங்க.... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்லாப் போகுது. தொடருங்கள். காத்திருக்கோம்:)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28 மே, 2010 அன்று AM 5:33

    நல்லாருக்கு கண்ணன். தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    பதிலளிநீக்கு
  5. மெருகு கூடிகிட்டே போகுது உங்க எழுத்துநடையில.. கலக்குங்க.. எப்போ அடுத்த அத்தியாயம்?

    பதிலளிநீக்கு
  6. நனற்றாக காட்சிகளை நகர்த்துகிறீர்கள்...தொடருங்கள்...உங்கள்ளின் கவிதைகளும் மிக நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. நல்ல திரைகதையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. கதையை மெல்ல சுவாரசியம் கூட்டி சொல்கிறீர்கள் ..
    போகப் போக விறுவிறுப்பாக மாறும் என நினைக்கிறேன் ...
    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்