கூட்டுப்புழு

இப்பொழுதுதான் சற்று தூறி முடித்திருந்தது. 

மாடியில் உள்ள ரூமில் கட்டிலில் உட்கார்ந்து நான் படித்துக்கொண்டிருந்தேன்.

“ மழை பேஞ்சிருந்தாவது ஒரளவு குளிந்தா மாதிரி இருந்திருக்கும். இந்த தூறல் வேற சனியன் மாதிரி.. வெக்கையை இன்னும் கிளப்பி விட்ருத்து... ” விசிறுக்கொண்டே சமையலுள் நிலைப்படியில் தலைசாய்த்திருந்தவளுக்கு “ அம்மா பால்” பால்காரன் செல்வத்தின் குரல் கேட்டது.

 “ ஏய் ரமா இங்க வா” பாவுலிருந்து சத்தம்.. அப்பா... ரிடயர்டு ஆனதிலிருந்து பாவுல்தான் அவருக்கு எல்லாம்... சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேதான்.. காலைக் கடன்களுக்கும், குளிப்பதற்கும் தவிர்த்து சதா சர்வ காலமும் பாவுல்தான்..

 “ ஏய் ரமா.... ஏய் யாரவது அங்கே இருக்கேளா... இல்லேன்னா எல்லாரும் போய் சேந்துட்டேளா”. வாசலில் பால் காரன் செல்வத்திடம் பால் வாங்கி கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது அப்பாவின் குரல் கணிரென்று கேட்டது.. பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு உள்ளே ஒடினவளிடம்

 “ அம்மா எம்முட்டுமா” செல்வத்தின் குரல் கேட்டாலும் பதில் சொல்லாமல் அம்மா ஒடினாள்... ஒடினாளா ? அவள் நடந்து போன வேகம் அப்படித்தான் இருந்தது. 

“ இன்னும் நாலு வீட்டுக்கு போக வேணாமா... இந்தம்மா வேற”  செல்வம் முனங்கி கொண்டு இருந்தான்.

வேகமாக வந்தவள் பாவுல் நிலையில் ஒரு ஒரமாக சாய்ந்து நின்றாள்.

“ சொல்லுங்கோன்னா” என்றவளிடம்

 “ கூப்பிட ஒடன்ன வராம்ம எங்க ஒழிஞ்சு போயிட்டே”  என்று திரும்பி கூட பார்க்காமல் எரிந்து விழுந்தார்.  சற்று நேரம் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள். அவளுக்கு தெரியும் என்ன பதில் சொன்னாலும் அதுக்கும் ஏதாவது வந்து விழுமென்று.

அம்மா இப்படிதான். அப்பா திட்டினாலும் அடித்தாலும் இது நாள் வரையிலும் ஒன்றும் சொன்னதில்லை. எனக்கு விவரம் புரிந்த வயதிலிருந்து அப்பா இப்படித்தான். அம்மா என்று இல்லை , நான், சுதா யாரிடமும் சிரித்து பேசியதில்லை. அதுக்காக அவர் முசுடு ஒன்றும் இல்லை. என்னையும் , சுதாவையும் நன்றாக படிக்க வைத்திருந்தார். சுதா படிப்பதற்கு , பொண் குழந்தைகள ஏன் படிக்க வைக்கனும் என்று அக்கம் பக்கம் வந்த முனங்கல்களை அவர் ஒரு பொருட்டாக மதித்ததும் கிடையாது.

 “ சுந்தரா செத்த கிழ வா... அப்பா கூப்பிடறார் பார்” அம்மாவின் குரல் கேட்டதும் படித்து கொண்டிருந்த புக்கை மூடி வைத்து விட்டு கிழே வந்தேன்.  கிழ வரவும் பால்காரன் நியாபகம் வந்தவள் மாதிரி அம்மா வாசல் நோக்கி போனாள். நான் பாவுல் நிலைப்படியில் போய் நின்றேன்.

“ என்னடா நீ.. வயசுக்கு வந்த பொம்மனாட்டி மாதிரி அங்க நின்னுண்டு இங்க வா” என்றார்.

 உள் நுழைந்து “ அப்பா” என்றவனிடம்

 “ என்ன பன்னிண்டுருக்க” என்றார்.

 “ பி.எஸ்.ஆர்.பி” அப்ளை பன்னிருக்கேன்பா.. அதுக்கு பிரிப்பேர் பன்னின்ண்டு இருக்கேன்” என்றேன்.

“ எப்ப எக்ஸாம்” கேட்டவரிடம் “ அடுத்த மாசம்பா” என்று சொல்லி முடிப்பதற்குள் “ சுதா எங்க ? “ என்றார். 

“ தெரியலப்பா.. அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றவனிடம் “ செரி செரி இருக்கட்டும்... வெளில போறியா” என்றார்.

“ இப்ப இல்லப்பா கொஞ்ச நேரமாகும்பா” என்றேன். 

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் “ செரி செரி வழில எங்கயாது வக்கில குமாஸ்தா சவுந்தர்ராஜன பார்த்தேனா ஆத்து வரைக்கும் வந்துட்டு போ சொல்லு” என்றார்.

 “ சரிப்பா ”  என்று நின்று கொண்டிருந்தேன். வேறு எதுவும் சொல்லாமல் ஏதோ நியாபகத்தில் ஆழ்ந்தவரை புரிந்து கொண்டு நானே அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். மாடியில் ஏற போனவனை “ சுந்தரா... இங்க வா” அம்மா குரல் அழைக்க சமையலுள்ள நோக்கி நகர்ந்தேன். 

“ இந்த சீனி டப்பாவா கொஞ்சம் எடுத்து தாடா.. எனக்கு எட்டலை” என்றாள். 

அவளையே பார்த்துக்கொண்டு “ ஏம்மா ஸ்டுல கொண்டு வந்து போட்டு எடுத்துகலாம்ல” என்றவனிடம் “ அடுப்புல பால் காயறதுடா.. இல்லேன்னா நான் எடுத்துக்க மாட்டேனா” என்றாள்.

முனங்கி கொண்டே எடுத்து கொடுத்தவனிடம் “ கொஞ்ச நேரம் இரு.. காபி போட்டுடறேன்.. குடிச்சுட்டு மேல போ” என்றாள். தலையசத்தவாறே ஹாலுக்கு வந்தேன். சற்று நேரம் தரையில் கிடந்த ஹிந்து பேப்பரை பொரட்டி கொண்டிருக்கையில் அம்மா கையில் காப்பியுடன் வந்தாள்.

 “ ஏய் ரமா கொஞ்சம் தீர்த்தம் எடுத்துண்டு வா” அப்பாவின் குரல் கேட்க கையில் காப்பி டம்ளரை தினித்து விட்டு அப்பாவுக்கு தண்ணி எடுத்து கொண்டு ஒடினாள். காப்பி குடித்து முடித்து விட்டு சமையலுள்ளில் கொண்டு போய் டம்ளரை வைத்து விட்டு திரும்புகையில் எதிர்க்க வந்த அம்மாவிடம் “ சுதா எங்கம்மா” என்றேன்.

“ யாரோ சிநேகிதியாளா பார்த்துட்டு அப்படியே லைப்பரிக்கு போயிட்டு வரேன்னு போயிருக்காடா” என்றாள்.

“ செரிம்மா நான் மாடில உட்கார்ந்து படிச்சுண்டு இருக்கேன்.. எதுவும் வேனும்னா கூப்பிடு” சொல்லிவிட்டு மாடியேறினேன். வாசல் கதவை திறக்கும் சத்தமும் “ அண்ணா” என்ற சுதாவின் குரலும் , “சுந்தரா” என்ற அப்பாவின் குரலும் ஒரு சேர கேட்டது. 

-- தொடர்வேன்.

பின்குறிப்பு : இன்னும் இரண்டு பகுதிகளில் கண்டிப்பாக முடித்து விடலாம் என்று தொடங்கியிறுக்கிறேன்.

இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

6 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நீங்களே எழுதிய கதை என்றால் வாழ்த்துக்கள்... நாவல் மாதிரி ரொம்ப நீளமா அல்லது ஓரிரு எபிசொட்களோடு முடித்துவிடுவீர்களா...

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொடக்கம்
    //பாவுல் //
    அப்படின்னா என்ன அண்ணா? முற்றம்மா?

    பதிலளிநீக்கு
  3. நல்ல யதார்த்தமான நடை மாப்ள. தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்