சாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்






இன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது.

ஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங்கிருப்பீங்களான்னு ஆரம்பிச்சாரு.

இல்லைங்ணா.. ஒரு முப்பத்தெட்டு ஆகிப்போச்சு இந்த வாட்டி அப்படினதுக்கு  அவர் மூஞ்சில ஈயோடல...

வாங்கறீங்க .. சரி எதுனாச்சும் படிப்பீங்களா அப்படினாப்டி..

உறுதியா, அதுக்குதான வாங்கறது அப்படின்னேன்..

சரி இதுவரைக்கும் படிச்ச எதயாது சொல்லுங்க பார்ப்போம்.. என்ன மாதிரி வாசிப்பிங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அப்படின்னாரு..
ரொம்ப பின்னாடில்லாம் போகலிங்க.. இப்போதைக்கு இந்த புக் ஃபேர்ல ஒரு வாங்கின புத்தகத்த பத்தி சொல்றேன் கேட்டுக்கோங்க அப்படின்னு சாயாவனத்த பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

“ தன்னோட கனவான ஆலைய நிர்மானிக்க வேண்டி ஒருத்தன் ஒரு வனத்த அழிச்ச கதைங்க இந்த சாயாவனம்”..

அதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால சின்ன வயசுல சொந்த மண்ண விட்டுபோன ஒருத்தன் ,பின்னாடி பல தேசம் சுத்தி சம்பாதிச்ச காச வைச்சுக்கிட்டு தன்னோட பிறந்த மண்ணுக்கே வரான்..  வந்த இடத்துல தன் சொந்த சனங்களுக்கு மத்தியில தான் நினைச்ச கரும்பாலைய அமைக்க  ,அந்த ஊருல இருக்கற ஒரு பெரிய மனுசன் கிட்ட ஒரு தோட்டத்த கிரையம் முடிக்கறான்.

தோட்டம்னா அது சும்மா ஒரு சின்னத் தோட்டம் இல்லைங்க.. ஒரு வனம்.. வனம்னா பல விலங்கினங்கள் , பட்சிகள் இன்னும் பல பல உயிரினங்கள் ஆன்ந்த கூத்தாடிட்டு இருக்கற பூமி.. அந்த தோட்டத்த வாங்கி அங்க ஆலைய நிர்மானிக்க வேலைக்கு ஆள் கிடைக்காம அவனே அந்த வனத்த அழிக்க ஆரம்பிக்கறான்.  கதையின் பெரும்பகுதி அவனுக்கும் அந்த வனத்துக்கும் நடக்கிற யுத்தத்த பத்திதான். அந்த ஊருல அவனுக்கு எல்லா விதத்திலும் சப்போட்டுன்னா அவனுக்கு இருக்க்கற மாமாதான்.. அப்பப்ப அவரும் துணைக்கு வர  அவனோட யுத்தம் நடக்க ஆரம்பிக்குது.. அந்த யுத்ததின் ஒட்டத்தோட அந்த வனத்துல படர்ந்திருக்கற செடி கொடிகளோட மனுசங்க குணத்த ஒப்பிட்டு வர விவரணைகைகள் சான்ஸே இல்லைங்க..  கதையின் போக்கோட இன்னும் சில விசயங்கள் அழகா சொல்லப்பட்டிருக்கு..  கதை நடக்கற காலம் சுதந்திரத்திற்கு  முற்பட்ட காலகட்டம்..  அப்ப மக்களிடைய பெரும்பாலும் பண்ட மாற்று முறைதான் நடந்துட்டு இருக்கு.. வேலைக்கு சம்பளமும் நெல்தான்..  முதலாளி மார்களுக்கும், வேலையாட்களுக்கும் இருந்த பிணைப்பு அவ்வளவ்வு அழகா சொல்லப்பட்டிருக்கு..

ஒரு கட்டத்துல சிதம்பரம்...

 “யாரது சிதம்பரம்  ?”
ஒ.. சாரி .. உங்ககிட்ட அந்த கதைநாயகனோட பேரைய சொல்லலைல.  அதாங்க அந்த கரும்பாலை வைக்க அந்த வனத்த அழிக்கறவன்.. அவந்தான் சிதம்பரம்... அவன் காட்ட அழிக்கறதுல பொறுமை இழந்து அவனோட மாமாக்கிட்ட மாமா காட்டுக்கு தீ வச்சுறலாமாங்கிறான்.. அவரும் ஒ.கேன்னு சொல்ல.. காட்டுக்கு தீ வைக்கிறான்..

தீ வைக்கிறப்ப ஒரு காட்சி வருது.. தீயோட வெக்கை தாங்க முடியாம அந்த காட்டுல இருக்கற ஒவ்வொரு உயிரினமும் வெகுண்டு ஓடுது.  அப்ப ஒரு காக்கை வந்து சிதம்பரம் மேல விழுது..  அந்த காக்கைய அவன் தீயில திரும்பி தூக்கி போட்டு பொசுக்கற காட்சி...சே என்னடா இவன்லாம் ஒரு மனுசனானு எரிச்சலா வந்துச்சு...

காடு முழுக்க எரிஞ்ச உடனே அத பார்க்க சிதம்பரமும் மாமாவும் வராங்க..  அப்ப காடு முழுக்க இருந்த அழகான புன்னை, புளிய மரங்கள், மூங்கில்கள் எல்லாம் கரி கட்டையாகி கிடக்குது..  அதோட அங்க இருந்த ஆடு, மாடு, முயல் மற்றும்  இன்னபிற விலங்குகள் எல்லாம் செத்து விழுந்துருக்குதுங்க..  அத பார்த்த சிதம்பரத்தோட மாமா ஒரு மாதிரி ஆகிடராரு.. அவ சிதம்ப்ரம் சொல்றான் பாருங்க ஒரு வசனம்..

 “நம்ம வேணும்னு எதுவும் செய்யலீங்க மாமா”.....

கொஞ்சம் கடுப்பா வந்துச்சு இந்த இடம்.. இப்படித்தான் மனுச பய அவனோட தப்பு ஒவ்வொன்னுக்கும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி சமாதானம் சொல்லி தப்பிச்சுக்கறான் இல்லிங்களா...

  “இம்ம்”...

எப்படியோ காட்ட அழிச்சு ஒரு வழியா ஆலையா கட்ட ஆரம்பிக்கறான்.. அந்த ஆலைய கட்ட ஒரு பெரும் தச்சர் கூட்டமே வந்து வேலை பாக்குது..  அவங்களுக்கு கூலியா சிதம்பரம் காச கொடுக்க நினைக்க.. அந்த தச்சர் கூட்ட தலைவன் சொல்றான் “ காச திங்கவாங்க முடியும்.. எங்களுக்கு நெல்லுதாங்க வேணும்”... எனக்கு நம்மள நினைச்சு சிரிப்பு வந்தது...

பின்னாடி எப்படியோ சமாளிச்சு அவனோட மாமா, அப்புறம் அந்த ஊரு பெருந்தனக்காரங்க எல்லாத்துகிட்டயும் கெஞ்சி கூத்தாடி நெல்லு வாங்கி அவங்களுக்கு சம்பளமா கொடுக்கான்.. அப்படியே போயிட்டு இருக்கற வாழ்கைல நெல்லுக்கு தட்டுபாடு வர அவன் முழிச்சு கிட்டே வேலையாளுங்களுக்கு காசா கொடுக்க ஆரம்பிக்கறான்..  இதுக்கு பதிலுக்கு வேலையாளுங்க எங்களுக்கு பணம் வேணாம் நெல்லுதான் வேணும்னு ஸ்டரைக்கெல்லாம் பண்ண ஆரம்பிக்கறாங்க..

அத சமாளிக்க இவனே அந்த ஊருல ஒரு பலசரக்கு கடைய ஆரம்பிச்சு அவங்ககிட்ட சொல்றான் நீங்க அந்த கடைல காசு கொடுத்தா உங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்னு.. அப்படியே போராடி ஒரு வழியா ஆலைய கட்டி முடிச்சு உற்பத்தியயும் தொடங்கி தொழில்ல ஜமாய்கிறான்.. அதுலயும் ஒரு சிக்கல்..  என்ன சிக்கல்னா கரும்பு.. ஆலைக்கு கரும்ப எங்கேந்தோ கொண்டு வர வேண்டியிருக்கு.. அதுக்கும் அந்த ஊரு காரங்க கிட்ட போராடி கரும்ப விளைய வைக்கிறான்..

இப்படியே போயிட்டு இருக்கறப்ப இன்னொரு சிக்கல் வருது..
என்ன சிக்கல்னா அந்த ஊருல சமையல் புளிக்கு தட்டுப்பாடு.. இவனும் எப்படியோ நிறைய ஊருக்கு போயி ஒவ்வொரு இடத்திலேந்தும் இனிப்பு புளி, புளிப்பு புளின்னுல்லாம் வாங்கிட்டு வந்து எல்லாத்தயும் ஒன்னா கலந்து  விக்கிறான்..

அந்தப் புளிய வாங்கிட்டு போர ஒரு கிளவி , புளி வாயிலையே வைக்க வெலங்கலன்னு அவன் மூஞ்சில காரி துப்பிட்டு போகுது.. ஏன் ஆட்சின்னு கேக்கறப்ப அதான் நீ எல்லாத்தயும் அழிச்சிட்டியேன்னு போகுது..
என்ன விசயம்னா இவன் எந்த வனத்த அழிச்சானோ அந்த வனத்துல இருந்த ஒவ்வொரு புளிய மரமும் ஒவ்வொரு வீட்டுக்கு புளி சப்ளை பண்ணிட்டு இருந்திருக்கு..

“ நல்லாத்தான் இருங்குங்க கதை.. புத்தகம் எங்க கிடைக்கும் ? என்ன விலைன்னாரு கூட வேலை பாக்கறவரு..

புத்தகம் : சாயாவனம்
ஆசிரியர் : சா.கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 150 ரூபாய்

இத சொல்லிருக்கேன் .. அவரு வாங்கறாருன்னு தெரியலை.. உங்களுக்கு தோணுச்சுன்னா நீங்க வாங்குங்க..  அருமையான புத்தகம்.. உங்க கலக்‌ஷன்ல கண்டிப்பா இருக்க வேண்டியது.. வாங்கி வச்சா போதாது.. கட்டாயமா படிக்கனும்...
க ரா

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

10 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அருமை, க.ரா.!

    இந்தக் கதையை ஒரு தனிமனிதனுக்கும் காட்டுக்கும் இடையிலான போராட்டம் என்னும் அளவுக்கே ஞாபகத்தில் இருத்தி இருந்த எனக்கு இப்போது மேலும் சில தெளிவுகளைத் தந்திருக்கிறீர்கள்.

    இதைவிட, வாசித்தது பற்றி நீங்கள் எழுதத் திருவுளம் கொண்டதே எங்கள் பாக்கியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை எழுத தூண்டியதில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கு சார்.. நன்றிகள் பல...

      நீக்கு
  2. கரா,

    உண்மையில் விசாரணைக் கமிசனை விட எனக்குப் பிடித்த நாவல் இது. விசாரணைக் கமிஷன் ஒரு தனி நபர் போராட்டம் போலத்தான் எழுதி இருப்பார். ஆனால் இது சமூகம் சார்ந்த ஒரு போராட்டமும், விளைவுகளுமாக விரியும் நாவல்.

    இதே போலத்தான் விட்டல்ராவின் போக்கிடம் நாவலும். வாசித்துப் பாருங்கள். இது ஒரு தனிநபரின் ஆசைக்காக அழிக்கப்படும் இயற்கை. போக்கிடம் அரசாங்கமே இயற்கையை அழித்து மக்களைக் காலி செய்யும் கதை.

    நீங்கள் எழுதியதில் மிக மகிழ்ச்சி எனக்கு.

    எழுத்துப் பிழைகளில் கவனம் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணாச்சி.. கண்டிப்பா பிழையின்றி எழுத முயல்கிறேன்.. உங்கள் பரிந்துரைகள நோட் பண்ணிக்கறேன்.. அடுத்த புத்தக காட்சியிலயோ இல்லேன்னா ஒரு ஆறு மாசம் வேடியப்பன் அண்ணாச்சிகிட்டயோதான் வாங்கனும்...

      நீக்கு
  3. வாசிப்பதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். சூப்பர்.

    நல்லா வந்திருக்கு அண்ணாச்சி, வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.

    வாசிக்க வேண்டியவற்றில் சாயாவனத்தையும் சேர்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நானும் படித்திருக்கேன். மறுவாசிப்பு செய்தது போல இருந்தது உங்க பதிவு .அருமை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்