முதுமையில் காதல்

அம்பது பேரபுள்ள பாத்த
ஆறுமுகம் கிழவனுக்கு இன்னிக்கு
எம்பது வயசாச்சம்
வந்த சொந்த பத்தம் அத்தனயும்
கூடத்தில சுத்தி நிக்க
பொக்க வாய் கிழவன் பக்கத்துல
விசலாச்சி ஆச்சி நின்னது கூர புடவயில
பொக்க வாய் கிழவன சொன்னான்
மரப்பாச்சிக் பொம்மைக்கு
எட்டு கசத்துல புடவைய பாருன்னு
ஈக்க மாரு குச்சிக்கு
வேட்டி கட்டி விட்டதாருன்னு
விசலாச்சி ஆச்சி போட்டு தாக்க
பொக்க வாய் கிழவனுக்கு புரை ஏறிடிச்சு
கீர்த்தி சிறுசானலும் மூர்த்தி பெறுசு பாரு
சுத்தி நின்ன கூட்டத்த காட்டி கிழவன் சொல்ல
போகப்போற வயசு வந்தும் குசும்ப பாரு
விசலாச்சி ஆச்சி விரட்ட
சீக்கிரம் போக விடு இந்திரலோகத்துக்கு
மேனகையும் ஊர்வசியும் இருக்காக எனக்கு
பொக்க வாய் கிழவன் குசும்பு காட்ட
உனக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்
ஆச்சி சொல்லி விசும்ப கிழவன் சொன்னான்
நா இல்லாம நீ போயிருவியான்னு.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

24 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. போகப்போற வயசு வந்தும் குசும்ப பாரு
    விசலாச்சி ஆச்சி விரட்ட
    சீக்கிரம் போக விடு இந்திரலோகத்துக்கு
    மேனகையும் ஊர்வசியும் இருக்காக எனக்கு
    பொக்க வாய் கிழவன் குசும்பு காட்ட


    .... SO SWEET!

    பதிலளிநீக்கு
  2. \\நா இல்லாம நீ போயிருவியான்னு\\
    :-)))

    பதிலளிநீக்கு
  3. ராம்ஸ் உன்னோட உண்மையான வயச நான் கண்டு பிடிச்சிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. அண்ணே கை குடுங்க.. அசத்திட்டீங்க.. இன்னும் சில நாட்களுக்கு ஆறுமுகமும்.. விசாலாட்சியும் மூளைக்குள் சுழல்வார்கள்..

    பதிலளிநீக்கு
  5. ஏங்க? கந்தகபூமிக்கு எழுத்து வரமா?

    பதிலளிநீக்கு
  6. அருமையா எழுதியிருக்கீங்க.. :)

    பதிலளிநீக்கு
  7. அடடா... இதுவல்லவோ காதல்... எத்தன வயசான என்னங்க... காதல் காதல்தானே... அருமைங்க...

    பதிலளிநீக்கு
  8. அந்த‌ ஐம்ப‌துல்ல‌, உங்க‌ நம்ப‌ர்?
    க‌விதை குசும்பும், கொஞ்ச‌லுமாய்.
    //பொக்க வாய் கிழவனுக்கு ......
    கீர்த்தி சிறுசானலும் மூர்த்தி பெறுசு பாரு//

    பதிலளிநீக்கு
  9. உனக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்
    ஆச்சி சொல்லி விசும்ப கிழவன் சொன்னான்
    நா இல்லாம நீ போயிருவியான்னு.
    ஒருவருக்கொருவர் என்று வாழ்ந்த நிறைவான வாழ்க்கையின் நயமான பதிவு..

    பதிலளிநீக்கு
  10. இதுதான் தாம்பத்யம்..............இதுதான் காதல்!

    பதிலளிநீக்கு
  11. கவிதையில விளைஞ்சி கிடக்குங்க அன்பு.

    பதிலளிநீக்கு
  12. நன்றி
    @@ சித்ரா (புரொபைல் போட்டோ சூப்பருங்க).
    @@ அம்பிகா
    @@ ரமேஷ்(என் வயசு பதினாறுன்னு யாருக்கும் சொல்லிராத நண்பா)
    @@ கே.ஆர்.பி. செந்தில்( நீஙகதான் என்னிக்கும் எனக்கு அண்ணண்.)
    @@ வானம்பாடிகள்( ஐயா எனக்கு பதில் தெரியலைங்கய்யா)
    @@ ஜெய்
    @@ வழிப்போக்கன்(முதல் வருகைக்கு)
    @@ பாலாசி (அடுத்த பதிவு எப்போ)
    @@ வாசன்( முதல் வருக்கைக்கு நன்றிங்கயா)
    @@ ரிஷபன்
    @@ தேவா( நன்றிங்கன்னா)
    @@ கருணாகரசு( நன்றிங்க)

    @@

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நெகிழ்வா இருக்குங்க...
    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள. :-)

    மண்ணும், மனசும் குழைத்த பாஷை...

    முனண்டி(முனியாண்டி) தாத்தா, வள்ளி அம்மாச்சியை பார்த்தது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  15. @@ நன்றி பத்மா
    @@ நன்றி மாம்ஸ்.

    பதிலளிநீக்கு
  16. முதுமைக்கும் காதல் கவிதை எழுதி இளமையாக்கிய விதம் மிகவும் அருமை நண்பரே . இருமுறை வாசித்து நான் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று , பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. ஒரு விதமாவே எழுதுறீங்களே...இது எந்த வகை...

    பதிலளிநீக்கு
  18. //ஆச்சி சொல்லி விசும்ப கிழவன் சொன்னான்
    நா இல்லாம நீ போயிருவியான்னு//

    செங்காட்டு வாசம் கமழ்கிறது

    அருமை

    பதிலளிநீக்கு
  19. வஞ்சகமில்லாத காதல். உயிரோடு இணைந்தது உண்மைக்காதல்.அழகாய் நன்றாய் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  20. பின்னிடிங்கே....எங்க ஊரு பெருசுங்களா கண்முன் ஒரு காட்சியா விரிய வச்சுடிங்க....

    பதிலளிநீக்கு
  21. உன்மையில் மிக அழகாக இருந்தது உங்கள் கவிதை , நான் மிகவும் ரசித்தேன், கடைசி வரியில் அழுதேன்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்