சிக்கன்

ஞாயிறு மத்தியானம் எனது சாப்ட்வேர் கம்பெனி சகாக்களுடன் கிரிக்கெட் ஆடி முடித்த களைப்பில் எனது ஹோண்டா சிட்டி காரை பார்க்கிங்கில் நிறுத்தி வீட்டுக்குள் நுழைகயில் வாப்பா நல்லா இருக்கியா , இன்னும் இந்த வெளயாட்டு புத்தி போகலியாக்கும் என்று குரல் வரவேற்ற பக்கத்தை பார்த்தால் ராஜெந்திரன் அங்கிள் ஒக்காந்து இருந்தார்.

ராஜெந்திரன் அங்கிள் அப்பாவின் சிரு வயது நண்பர். எங்க ஊரில் ஒரு சின்ன பிரிண்டிங் பிரஸ் வச்சுருந்தார். அவருக்கு சுபா என்று ஒரு பெண்ணும், சுகுந்தன் என்று ஒரு பையணும் உண்டு. எனது தந்தை ஒரு மத்திய வங்கியில் பனியில் இருந்ததால் வடமாநிலங்களின் பல ஊர்களில் எனது பள்ளி படிப்பு தொடர்ந்தது. அப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு சுபாவும் சுகந்தனும்தான் விளையாட்டு தோழர்கள்.

அங்கிளிடம் எல்லாருடய சுகங்களயும் விசாரித்து விட்டு குளிக்க சென்றேன்.

 ஞாயிறு மத்தியானம் எனது வீட்டினில் ஸ்பெஷல் சமையலாக இருக்கும்.
அப்பாவிற்கு அன்றய தினம் ஒய்வாக வீட்டினில் இருப்பாரகையால் அன்று ஏதாவதொரு கறிக்குழம்பு இருக்கும். அப்பா வேலையில் இருந்து ஒய்வு பெற்று நாங்கள் சென்னை வந்தும் அந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. குளித்து முடித்து விட்டு வெளிய வரவும் அம்மா சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது. டைனிங் டெபிளில் அப்பாவும் , அங்கிளும் உக்காந்து இருக்க நானும் உட்கார அம்மா பரிமாற ஆரம்பித்தார். டாக்டரை காரணம் காட்டி  அங்கிள் சிக்கன் குழம்பை வேண்டாம் என்றார். சாபிட்டு முடித்து சிரிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு அங்கிள் கிளம்பிச்சென்றார்.

அவர் சென்றவுடன் அன்றய வாரமலருடன் நான் என் அறைக்குள் சென்று அதை புரட்டி கொண்டிருக்கயில் பழைய சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. சிரு வயதில் ஒரு விடுமுறை முடிவினில்  தாத்தா வீட்டினில் இருந்து  ஊருக்கு திரும்பி கூட்டிச்செல்ல அப்பா வந்திருந்தார். கிளம்பும் முன்னர் நான் அப்பா அம்மா மூவரும் அங்கிளின் வீட்டிற்கு விடை பெற போயிருந்தோம். வீட்டினில் நுழைந்தவுடன் அம்மா அத்ட்தையுடன் பேச போய்விட்டார். நானும் அப்பாவும் முன்னறையில் அங்கிளுடன் பேசிக்கொண்டிருந்தொம். அப்பொழுது அங்கே எனது வயதொத்த சிறுவன் ஒருவன் வெளிறிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான். விசாரித்த
போது அவனது தந்தை பெயரயும், அவனது பள்ளி விருமுறைக்கு அவனை
பிரெஸ்லில் வேலைக்கு சேர்த்து விட்டுருப்பதயும் சொன்னார். அவனை பார்த போது அவன் சட்டையினுள் பூணூல் தெரிந்தது.

அன்றய தினம் அவனை பாய் கடைக்கு சிக்கன் கறி வாங்க பணம் கொடுத்து அனுப்பியகதாகவும், அவன் கொடுத்த பணத்தை தொலைத்து விட்டதாகவும்,
தான் அவனை அந்த பணத்தை அவனது தந்தையிடம் வாங்கி வர சொன்னதாகவும் , அவன் அதை மறுத்து அங்கேயே நின்று கொண்டிருப்பதயும் சொன்னார். என் தந்தை அவனை மன்னித்து விட சொன்னதற்கு , அவர் அதை
மருத்து , மன்னித்துவிட்டால் அவனுக்கு பொருப்பு வராது போய் விடும் என்று சொல்லி அவனை விரட்டவும் , அவன் அழுதுகொண்டே சென்ற்தும் என் நினைவில் வந்தது. சிரித்து கொண்டே தூங்கிப்போணென்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

10 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. அண்ணா இங்லீஷ் மீடியத்துல படிச்சீங்களா? அதெப்படீங்கண்ணா பெரிய 'ண' போடற இடத்தில எல்லாம்
    கரக்டா சின்ன 'ன'போடறீங்க.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா தவறுக்கு மன்னிக்கவும். கண்டிப்பா திருத்திக முயற்சி பண்ணறேன்.

    பதிலளிநீக்கு
  3. மருத்து , மன்னித்துவிட்டால் அவனுக்கு பொருப்பு வராது போய் விடும் என்று சொல்லி அவனை விரட்டவும் , அவன் அழுதுகொண்டே சென்ற்தும் என் நினைவில் வந்தது. சிரித்து கொண்டே தூங்கிப்போணென். .............கோழிக்கு பின்னால் இப்படி ஒரு கொசுவர்த்தி சுருளா? நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்கு நண்பா. தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  5. arumai , uncle kku kohli poche nnu varutham nallave theriyuthu...
    melum.. chitra avarkalin pinottam kohli kku pinnal oru kosu varthi churulaannu oru kelvi ..migavum arumaiaana sollaadai.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா எழுதறீங்க, கொஞ்சம் பிழைகளை மட்டும் திருத்திடுங்க பாஸ்...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி பிரபாகர்.கண்டிப்பா திருத்திக்கிறென்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்