ராமன் ரயிலேறிப்போனான்

   “ கிணி, கிணி, கிணி” ஸ்கூல் கடைசி பெல் அடித்தது.
  பெல் அடித்தவுடன் கிளாஸ் ரூமிலிருந்து பிள்ளைகள் சிட்டென வெளியே பறந்தனர். எல்லோரும் வெளியே போனவுடன் ராமன் அவனது மஞ்சபையை தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவனது இடதுகாலின் முட்டி சிராய்ந்து ரத்தம் கறையாக படிந்த்திருந்தது.  

மத்தியானம் சத்துணவு சாப்பாடு சாப்பிட்டு முடிந்தவுடன் விளையாட போய் நின்றவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கேலி செய்து கிழே தள்ளியிருந்தததில் அவன் கால் முட்டி சிராய்திருந்தது. ஏற்கனவே அவன் வலது காலை விட இடது கால் சற்று வளர்த்தி கம்மிதான். அதனால் ஏற்கனவே சற்று விந்தி விந்திதான நடப்பான். இதனால் மற்ற மாணவர்கள் அவனை நொண்டி எனதான் கூப்பிடுவார்கள்.

பள்ளியின் வாசலை தொட்டவுடன் அவனுடன் படிக்கும் பூதப்பாண்டி ஸ்கூட்டர் ஒட்டுவது மாதிரி “டுர்.. டுர்” என சவுண்டு கொடுத்துக்கொண்டு ஒடி வந்தவன் அவனது அருகில் வந்து “ ஏய் நொண்டி வா டா என் கூட பைக்ல . நான் ஒன்னைய வீட்டுல கொண்டு போய் விட்டுறேன்” என்றான் என்னவோ நெஜ பைக் ஒட்டுறவன் மாதிரி.

“ இல்ல எங்க அப்பா எனக்கு ரயில் வாங்கி கொடுத்துருக்காரு. நான் அதுலதான் போவேன். நீ போ” என்றான் ராமன்.

“ போடா நொண்டி. இவங்கப்பா பெரிய இவரு. இவனுக்கு ரயில் வாங்கி தரப்போராராம்” என்று பரிகாசம் பண்ணிவிட்டு அவன் நகர்ந்தான்.

அடி பட்ட காலை தூக்கி நடக்க முடியாமல் மெதுவாக விந்தி விந்தி மெயின் ரோட்டை கிராஸ் செய்தவன் தேவர் சிலை அருகே வரவும் அப்பொழுது போன கூட்ஸ் டிரயின் கூக்கூ என சத்தம் கொடுத்து கொண்டு போகும் சத்தம் கேட்டவுடன் வலி மறந்து கூக்கூ என்று சத்தம் கொடுத்துக்கொண்டே ஒடத்துவங்கினான்.

அவனது வீடு தேரடியின் சமிபத்தில் இருந்தது. அவனது தந்தை லிங்கம் சாத்தூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவன். அம்மா இசக்கிக்கும் அதே தொழில்தான். ஊரில் உள்ள பெரும்பாலனவர்களின் வீட்டிற்கு சென்று சாக்கடைகளை கழிவு விட்டு வருவாள். வீட்டிற்கு மாதத்திற்கு 25 ருபாயும் திபாவளி பொங்கலுக்கு போனசாக புடவை எனக் கிடைக்கும். இரண்டாவாதாக வயிற்றில் ஒரு குழந்தை வந்த வுடன் அவளால் முன்னர் மாதிர் இப்பொழுது எங்கேயும் போய் வர முடிவதில்லை.

ரயில் மாதிரி கத்திக்கொண்டே ஒடி வந்த ராமனால் பெருமாள் கோயிலை தாண்டி ஒட முடியவில்லை. நாகராஜன் சாரின் வீட்டிற்கு எதிரே வருகையில் கால் வலிக்க ஒட முடியாமல் கிழே படுத்துக்கிடந்த நாயின் மேல் விழப்போனான். இவன் மேலே விழுந்து விடுவானோ என்று பயந்தததில் அந்த நாயும் இவனை பார்த்து குரைத்ததில் பயந்தே போனான். பயத்தில் கணில் இருந்து தாரை தாரயாக் வழிந்த கண்ணிருடன் வீட்டை பார்த்து விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தான்.

இசக்கி அழுது ஒய்ந்து உடகார்ந்திருந்தாள். முடிந்து போன பீடித்துண்டு கையில் சுட வாயில் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை தூக்கி எறிந்தான் லிங்கம்.

திரும்பி குடிசைக்குள் எட்டிப்பார்த்தவன்  “ ஏய் அழுகைய நிப்பாட்டு முதல்ல. பிள்ள வந்த வுடனே அவன கூப்பிட்டு கிழம்பனும். துணியெல்லாம் எடுத்து வச்சியா நீ” என்றான்.

அத்தனை நேரம் அவனுடன் சண்டை போட்டு முடியாமல்

“ கடைசியா ஒரு தடவை யோசிங்க மாமா. புள்ளை பாவம் மாமா” என்றாள் இசக்கி.

ஆத்திரத்துடன் திரும்பியவன் எழுந்து வந்து அப்படியே அவளின் முடியை கொத்தாக பிடித்தான். வலி தாங்கமல் கத்தியவளை பொடுட்படுத்தாமல்

“ இன்னொரு தடவை இப்படி எதுவ்ம் சொன்ன கொன்னு போட்ருவேன்” என்றான்.

நொண்டிக்கொண்டே வீட்டினுள் நுழைந்த ராமன் “ அம்மா கால் வலிக்கு ” என்றான். ராமன் குரலை கேட்ட இசக்கி பையினுள் துணிகளை அடுக்கி கொண்டே திரும்பி பார்த்தாள். காலில் ரத்தக் கறையுடனும் கண்ணில் நீருடன் நின்றிருந்த ராமனை பார்த்த இசக்கி துடித்துப்போனாள்.

“ என்னையா ஆச்சு. எங்க விழுந்த” என்றாவாறு ராமன பிடித்து இழத்து காலை பார்த்தாள்.  

“ மத்தியானம் வெலாடுறப்ப பசங்க கிழ தள்ளி விட்டுடாங்க” என்றான் ராமன்.

“ ஐயோ ஏன் புள்ளைய தள்ளி விட்டவன் நாசாமப் போவ” என்று சாபமிட ஆரம்பிக்கவும் ,

“ ஏய் என்ன கத்திகிட்டு கிடக்க. துணிய எடுத்து வச்சியா இல்லயா”  என்று கத்திக்க்கொண்டே லிங்கம் உள்ளே நுழைந்தான்.

“ மாமா இன்னிக்கு, வேணாம் மாமா. புள்ள ஏற்கனவே அடிபட்டு வந்து நிக்கு” என்று இசக்கி சொல்லி முடிப்பத்ற்குள்,

இரைந்து கிடக்கும் துணிகளை பார்த்துக்கொண்டே “ எம்மா எங்கம்மா போறோம்” என்றான் ராமன்.

“ ரயில்ல போகபோறோம்” என்றான் லிங்கம்.

ரயில் என்ற வார்த்தையை கேட்ட வுடன் ராமனுக்கு வலி மறந்து போய் உற்சாகம் தொற்றிக்கொண்டது. கையை பிடித்திருந்த இசக்கியின் கையை உதறி விட்டு வெளியே ஒடினான்.

உற்சாகத்தில் வெளியே ஒடினவன் தனலட்சுமி தியேட்டரை தாண்டி சிவன் கோயில் தாண்டி தெப்பகுளத்தை தாண்டி “ கூக்கூ. குச்சு குச்சு” என்று திரும்பி திரும்பி ரயில் மாதிரி கத்திக்கொண்டே ஒடினான். வழியில் நாகராஜன் சாரின் விட்டை நெருங்கபோதும் மட்டும் ஸ்கூல் விட்டு வரும் போது குரைத்த நாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே கத்துவதை நிறுத்தாமல் தேரடியை நோக்கி ஒடவும் , அங்கே இருந்த சாத்தூர் முன்சிபாலிட்டியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சத்தம் கொடுத்துகொண்டே போவது அவன் கண்ணில் படவும் சரியாக இருந்த்து. 

ரயிலை பார்த்த சந்தோசத்தில் “ நாங்களும் ரயில்ல போறெமே” என்று கத்திக்கொண்டே வீட்டை பார்த்து ஒடினான்.  அவன் குரலில் கால் வலியின் தடம் முழுவதும் மறைந்து உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.

அவன் விட்டிற்குள் வரவும் இசக்கி எடுத்து வைத்த துணிபையுடன் லிங்கம் நின்று கொண்டிருந்தான் புரப்பட ஆயத்தமாக.

“ சரி வா போலாம்” என்றான் லிங்கம் ராமனை பார்த்து.

“ அம்மா” என்ற ராமனை பார்த்து “ அம்மா பின்னாடியே வரும் நீ வா போலாம்” என்றான் லிங்கம்.

கண்ணில் கண்ணிருடன் இசக்கி பிள்ளையை வழி அனுப்பி வைத்தாள்.

ரயில்வே ஸ்டஷனில் சுற்றி ராமனின் வயதொத்த பசங்களுடன் நின்று கொண்டிருந்த மனிதரின் அருகில் ராமனை அழைத்துகொண்டு போய் நிறுத்தி “அண்ணாச்சி” என்ற லிங்கத்தை பார்த்து திரும்பினார் அந்த மனிதர்.

திரும்பி பார்த்தவர் “ வா லிங்கம் “ என்றவரின் கண்கள் ராமனின் காலில் இருந்த காயத்தை பார்த்தார்.

“ என்ன ஆச்சுப்பா, கால்ல காயத்தோட நான் எப்படி கூட்டிட்டு போக” என்றார் லிங்கத்திடம்.

“ இல்ல அண்ணாச்சி சின்ன காயம்தான்” என்றான் லிங்கம் தலையை சொரிந்து கொண்டே.

“ இல்லல அங்க வந்து வேலை பாக்க முடியாமப்போச்சுனா முதலாளிகிட்ட நான்ல திட்டு வாங்கனும்” என்றவரிடம்

“ அதல்லாம் இல்ல அண்ணாச்சி” என்றான் லிங்கம்.

“சரி இந்தா” என்று லிங்கத்தின் கையில் சில ரூபாய் நோட்டுகளை திணித்தார் அந்த அண்ணாச்சி. ரூபாய் நோட்டை கண்டவுடன் லிங்கத்தின் முகம் மலர்ந்தது.

ரயில் வரவும் ஏறிய மனிதர் “ஏய் லிங்கம் ஒவ்வத்தனா ஏத்தி விடு” என்றார். எல்லாரயும் ஏத்தி விட்ட பின்னர் ராமன் அப்பா வராதை கண்டு

“ அப்பா நீ வரலியா” என்றான்.

“ இல்ல அம்மாவை கூட்டிகிட்டு பின்னாடியே நான் வாரேன். நீ அண்ணாச்சி கூட போ என்ன” என்று லிங்கம் சொல்லவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.

ரயில் சத்தம் கொடுத்ததை கேட்டு  உற்சாகமாகிய ராமன் “ கூக்கு, குச்சு குச்சு” என ரயில் மாதிரியே கத்த அவனின் குரல் ரயிலின் சத்தத்துடன் கலந்தது.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

14 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நீங்க மாக்கான் இல்லைங்க

    பதிலளிநீக்கு
  2. மிகவும அருமையான கதை நண்பரே . வார்த்தைகளில் எதார்த்தம் மிகவும் நேர்த்தியாக எழுதி இருகிறீகள்.
    கதையின் சூழ்நிலைக்கே கொண்டு சென்றுவிடுகிறது வார்த்தைகளின் தேர்ந்தெடுப்பு . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  3. ம்ம் எழுத்து மெருகேறி வருகிறது நண்ப!

    தொடர்க ...

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஓட்டம். மனம் கனக்கிறது. :(

    பதிலளிநீக்கு
  5. ஆமாங்க வேறு வேறு உலகம்! நெகிழ்சியான கதை.

    பதிலளிநீக்கு
  6. எத்தனை அருமையாக எழுதி இருக்கீங்க! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வலிக்குது தம்பி.....! ரொம்ப எதார்த்தமாக கொண்டு போய் மிகப்பெரிய சமுதாய தீமையை சர்வ சாதாரணமாக சொல்லியிருக்கீங்க....! வாழ்த்துக்கள்...! நிறைய எழுதுங்கள்...தம்பி!

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ராமசாமி... வசனங்கள் ரொம்ப இயல்பா இருக்கு... கதையை அழகா கொண்டுபோயி, முடிவுல ஒரு திருப்பத்தோட, சமூக பிரச்சினையும் சொல்லியிருக்கது சூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பாவம் பலியா போறோம்னு கூட தெரியாம போகுது புள்ள... நெகிழ்சியான கதை... நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  11. //அப்பாவி தங்கமணி சொன்னது…

    பாவம் பலியா போறோம்னு கூட தெரியாம போகுது புள்ள... நெகிழ்சியான கதை... நல்லா இருக்குங்க //

    நன்றிங்க கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  12. ரயில்வே ஸ்டஷனில் சுற்றி ராமனின் வயதொத்த பசங்களுடன் நின்று கொண்டிருந்த மனிதரின் அருகில் ராமனை அழைத்துகொண்டு போய் நிறுத்தி “அண்ணாச்சி” என்ற லிங்கத்தை பார்த்து திரும்பினார் அந்த மனிதர்.
    சொல்லாமல் சொல்லிய விதத்தில் கதை அப்படியே உலுக்கி விடுகிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்