பாட்டியுமானவர்



காக்காய்க்கு சோறுவைத்த பாட்டியிடம்
“ஏன் பாட்டி காக்காய்க்கு சோறு வக்கிற”
கேட்ட பேரனிடம் பாட்டி சொன்னாள்
“ அது காக்காய் இல்லப்பா , உன் தாத்தா”
பின்னொருநாளில்
காக்காயக்கு சோறுவைத்த அம்மாவிடம்
“ யாரும்மா அது தாத்தாவா “
கேட்ட மகனிடம் அம்மா சொன்னாள்
“ இல்லப்பா அது பாட்டி”.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

19 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ஆகா.. கடைசியில ரெண்டுபேருக்குமே வச்சாச்சா... சரிதான்...

    கவிதை நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  2. ஏன்னா கவிதை ...
    ரெண்டும் வேறு வேறு காக்காவா இருக்கும் .......

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப எதார்த்தமா பெரிய வாழ்வியல் பாடம் நடத்திட்டப்பா...ஒரு நாள் நாம் அனைவரும் காக்கா ஆவோம்...! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அடடா.. காக்காவுக்குள்ள இப்படி ஒரு தத்துவமா... :)

    பதிலளிநீக்கு
  5. :)). பெரிய தத்துவமாச்சே இது:)))

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்...எங்க வீட்லயும் சொல்லியிருக்காங்க.
    பிதிர்களாம் !

    பதிலளிநீக்கு
  7. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது..!
    அருமை..!

    பதிலளிநீக்கு
  9. @@wநன்றி பிரவின்குமார்
    @@நன்றி தேனக்கா.

    பதிலளிநீக்கு
  10. எப்படி எல்லாம் ஏமாத்திருகாங்க...கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  11. @@ ராசராசசோழன்
    ஒரு வயசு வரைக்கும் ஏமாந்து போறதென்னவோ நெசந்தாங்க
    @@ பா.ரா.
    வந்தனம் சார்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்